நாட்டிற்கு வரும் விமானங்கள் மூலம் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டுள்ளது.அதன்படி, சம்பந்தப்பட்ட தடுப்பூசி பெற்று 14 நாட்கள் கடந்து விட்டால் விமான நிறுவனங்கள் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை எந்த தடையும் இல்லாமல் ஏற்றிவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, அத்தகைய பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தவுடன் நாட்டிற்குல் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், இலங்கை சுற்றுலா சபையின் கருத்துப்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலா பயணிகள் போதிய வசதியுடன் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எந்த தடுப்பூசியும் எடுத்துக்கொள்ளாமல் பயணிகளை ஏற்றி வரும் விமாணங்கள் ஓரே நேரத்தில் 75 பேரை மட்டுமே அழைத்து வர முடியும்.
அத்தகைய பயணிகள் நாட்டிற்கு வந்தவுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட வேண்டும்.