நுவரெலியாவில் படப்பிடிப்பு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பிரபல சிங்கள நடிகை ஹயசிந்த் விஜேரத்ன, லிந்துலை பகுதியில் வைத்து அவர் பயணித்த வேன் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.
திருமதி ஹயசிந்த் விஜேரத்ன இறக்கும் போது அவருக்கு வயது 75
தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பு முடிந்து நேற்று (30) இரவு கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.