சமூக வலைத்தளங்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த இந்நாட்டில் எவ்வித சட்டரீதியான வழியும் இல்லையென அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தவோ, தடை செய்யவோ வேண்டுமெனக் கூறும் அமைச்சர் இது சம்பந்தமாக பலமுறை அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சீனாவில் தற்போது சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது கூறிய அவர், 90 வீதமான சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் கூறுகிறார்.