நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊழியர்களை விருப்பப்படி நிறுவனங்களுக்கு அழைத்தால், கொரோனா அபாயம் அதிகரிக்கலாம் என்றும், இந்த நேரத்தில் தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது நிறுவனங்களின் தலைவர்களின் பொறுப்பு என்றும் கூறினார்.