இலங்கையின் சிரேஸ்ட்ட இடதுசாரித் தலைவர்களில் ஒருவரை சிஐடிக்கு வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
நவ சமசமாஜக் கட்சியின் (NSSP) பொதுச் செயலாளர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இன்று (ஆகஸ்ட் 16 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கொம்பனி வீதியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (CID) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு ஏன் கட்சி உறுப்புரிமை வழங்கப்படுகிறது என பொலிசார் முன்பு கட்சி செயலாளரிடம் கேள்வி எழுப்பியதாக நவ சமசமாஜ கட்சி அறிவித்துள்ளது.
ராஜபக்ச ஆட்சி சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடும் இடதுசாரி தலைவர்களை வேட்டையாடுவதாக கட்சி குற்றம் சாட்டுகிறது.
"கோட்டாவின் பாசிச ஆட்சி இனவெறி சிறுபான்மையினரையும், அவர்களின் உரிமைகளுக்காக எழுந்து நிற்கும் இடதுசாரி முற்போக்குத் தலைவர்களையும் வேட்டையாடுகிறது என்பது தெளிவாகிறது."
அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் இந்த தீய, சர்வாதிகார இராணுவ,பொலிஸ் ஆட்சி அகற்றப்படாவிட்டால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பு இல்லை என்று கட்சி மேலும் அறிவிக்கிறது.