1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,

செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான நிலை அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவொரு மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவும் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. எனவே அது தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி