1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொவிட்-19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், கொரோனா தாக்கத்துக்குள்ளாகும் கைதிகளை பிணையில் விடுவிக்குமாறு அரசாங்கம் கூறுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையிலுள்ளனர்.

அவர்களில் பலருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டு மாறியுள்ளது. அவர்களை பிணையில் விடுங்களென பல தடவைகள் கோரியிருந்தோம். ஆனால், விடுவிக்கவில்லை. கொவிட்19 நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி