இளம் பாடகி யொஹானி டி சில்வா தற்போது பிரபலத்தின் உச்சியில் உள்ளார்.அவரது அட்டைப் பாடல் "மெனிகே மகே ஹித்தே" யூடியூபில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பாராட்டுதான், நம் அண்டை நாடான இந்தியாவிலிருந்து ஒரு இலங்கை பாடகிக்கு இதுவரை கிடைக்காத ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றதற்கு காரணம்.
இந்திய சூப்பர் ஸ்டாரால் புகழப்படும் வரை யொஹானியின் மதிப்பை நம் நாட்டில் யாரும் உணரவில்லையா?
இல்லை, அப்படி உணர்ந்த ஒருவர் இருந்தார். அவரை பாராட்டிய ஒருவர் இருந்தார். அது மங்கள சமரவீர.
மங்கள யொஹானியின் திறமை அவரை நவீன இலங்கைப் பாடகராகக் காட்டியது, அவரால் இலங்கைப் பாடலை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியும், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் உறைய வைத்துள்ளார்.
அதனால்தான் மங்கள ஒரு வருடத்திற்கு முன்பு அவர் பாடிய ஒரு பாடலை தேர்ந்தெடுத்தார், மில்லியன் கணக்கான மக்களின் அன்பை வெல்வதற்கு முன்பு அவர் பாடிய பாடல் அது.
இந்த பெண் ஒரு நவீன இலங்கையர்
"நான் இன்னும் அதிகமாக நம்புகிறேன், இந்த நாட்டில் இளைஞர்களே, மில்லினியல்ஸ் அல்லது எக்ஸ்,வை, இசட் தலைமுறை என்று ஒரு புதிய தலைமுறை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இந்த மக்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. வயதானவர்களுக்கு இல்லாத ஒரு பார்வை மற்றும் நம்பிக்கையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் இந்த கடைசி பாடலை தேர்ந்தெடுத்தேன்.
நிச்சயமாக நாங்கள் இதுவரை கடந்த காலத்தைப் பற்றி பேசினோம், ஆனால் இந்த கடைசி பாடல் உண்மையில் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு எனக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது ... இது அரசியலைப் பற்றியது அல்ல, அது உண்மையில் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைப்பது பற்றியது. .
இந்த நாட்டைப் பற்றி இது போன்ற பாடகர்களைப் பார்த்தபோது, நான் யார் என்று கூட பார்க்கவில்லை. ஒரு நாள் எனது ஐபேடில் பார்த்தபோது, இந்தப் பாடலில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இது இலங்கையின் எதிர்காலமாக இருக்க வேண்டும்.
இந்தப் பெண், யொஹானி, ஒரு பக்கத்தில் மிகப் பழைய சிங்களப் பாடலை நவீனப்படுத்தி, எப்படியாவது மேலைத்தேய ரெப் இசை தொடர்பான கருத்துகளைச் சேர்க்கிறார், மறுபுறம் ஒரு நேரத்தில் புடவை அணிந்தும் பின்னர் கிழிந்த டெனிம் அனிந்தும் வருகிறார்.
ஆனால், இந்த பெண் ஒரு நவீன இலங்கையர். அதுதான் இன்று நமக்குத் தேவை என்று நினைக்கிறேன். இலங்கையை நவீனப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் நாம் எப்போதுமே இந்த வரலாற்றைத் தழுவி, மகாவம்சம் அல்லது துட கெமுனுவை மட்டுமே தழுவியுள்ளோம். நமது பழக்கவழக்கங்களை நன்கு பின்பற்றும் அதேவேலை உலகத்துடன் முன்னேறக்கூடிய ஒரு நவீனத்துவம் நமக்குத் தேவை.
ஏனென்றால் இந்த நேரத்தில் நாங்கள் தேசபக்தியை ஒரு சிரிய கிணற்றில் பெரிய தவளைக்கூட்டம் கத்துவது போன்று உணர்கிறேன்.
உலகில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.சிரிய கிணற்றிலிருந்து நாங்கள் பெரிய தவலை போன்று கத்துவதால் பிரயோசனம் இல்லை, இன்று உலகம் முழுவதும் எங்களை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் நாம் ஒரு நவீன தேசபக்தியை உருவாக்க வேண்டும். நாம் ஒரு புத்திசாதூரியமான தேசபக்தியை உருவாக்க வேண்டும். இந்தப் பாடலில் நான் காணும் புத்திசாலி தேசபக்தி. இது போன்ற புதிய பாடகர்களின் எதிர்காலத்திற்கான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் 1000 அரசியல் கதைகளிலிருந்து வரும் நம்பிக்கையை விட அதிகம் என்று நான் நினைக்கிறேன்.