மறைந்த மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று (26) கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் மத வழிபாடுகள் நடைபெற்றன.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் தலைமை விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையில் மகா சங்கத்தினரால் மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த மங்கள சமரவீர, 1994 முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் சக்திவாய்ந்த நபராக இருந்ததுடன் பல பிரதானமான அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.
மங்களவின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,