1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் 7,500 முதல் 10,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) சுயாதீன தொழில்நுட்ப நிபுணர் குழுவின் இலங்கை அலுவலகம் குறிப்பிடுகிறது.

உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவும், தற்போதைய கட்டுப்பாடுகள் செப்டம்பர் 18 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் இணங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

அக்குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மாதிரிகள், புதிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களுக்கும் பரவியிருப்பதை காட்டுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கை அலுவலகத்தின் தலைமையில் சுதந்திர தொழில்நுட்ப நிபுணர் குழு நேற்று கூடி முக்கிய அவதானிப்புகள், தொழில்நுட்ப மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அதன் புதிய அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, புதிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வேகமாக பரவி, இயலாத கட்டத்தில் மருத்துவமனைக்கு செல்கின்றனர், மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஒக்ஸிஜன் உள்ளிட்ட மருந்து பொருட்களும் குறைவாக இருப்பதாக நிபுணர் குழு தெரிவிக்கிறது.

வீடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் அதற்கு இணங்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையில், தடுப்பூசி செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்.

வைரஸ் பரவுதல், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போதைய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டால் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், மூடுதல் செப்டம்பர் 18 வரை நீடிக்கப்பட்டால் 7,500 இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் குழு கூறியது. அக்டோபர் 2 வரை காலக்கெடுவை நீட்டித்தால் 10,000 இறப்புகளைத் தடுக்கலாம் என்றும் குழு கூறியது.

இது இலங்கையில் அதிக இறப்பு விகிதங்களில் ஒன்றாகும்.

இந்த கலந்துரையாடல்களை உலக சுகாதார அமைப்பின் தலைவரும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான வைத்தியர் டெட்ரோஸ் அதனோமின் சிறப்பு பிரதிநிதி வைத்தியர் பாலித அபேகோன் எளிதாக விளக்குகிறார்.

நிபுணர் குழுவிற்கு உலக சுகாதார அமைப்பின் இலங்கையின் பிரதிநிதியாக வைத்தியர் அழகா சிங் தலைமை தாங்குகிறார்.

வைத்தியர் விந்யா ஆரியரத்ன, பேராசிரியர் அசிதா டி சில்வா,வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, பேராசிரியர் சரோஜ் குணரத்ன, பேராசிரியர் இந்திக கருணாதிலகே, வைத்தியர் ரஜீவ டி சில்வா, பேராசிரியை நீலிகா மளவிகே, பேராசிரியர் கமினி மெண்டிஸ், பேராசிரியர் மலிக் பீரிஸ், பேராசிரியர். மனுஜ் வீரசிங்க,வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம 14 பலர் இந்த நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலதிகமாக, WHO மருத்துவர்கள் குழுவும் பங்கேற்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி