பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் பொட்ட நெளஃபர் எனப்படும் மொஹமட் நியாஸ் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸா சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பே பிட்டிய கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.