1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் - பூநகரி இடையிலுள்ள கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தின் பாகங்கள் உக்கிப்போயுள்ளதாகவும், இந்த பாலம் மக்கள் பாவனைக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளதா? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிறீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலத்தின் பாகங்கள் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகளில் துருப்பிடித்து சிதைவடைகின்றதாகவும், இதேவேளை, பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தபபட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சில காணாமல் போயுள்ளதாகவும் கூறப்கின்றது.

ஆரம்பத்தில் வருடம் தோறும் குறித்த பாலத்தை பராமரித்து வந்ததாகவும், எனினும் தற்பொழுது குறித்த பாலம் பராமரிக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு, பிரதமர் மகிந்தவினால் பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை உரிய முறையில் பாதுகாக்கி வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.      

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி