கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலத்தை எதிர்த்தமையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் – மக்கள் செயற்பாட்டாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பொதுவாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் சம்பந்தமாகவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி, சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் நேற்று (01) கடிதமொன்றை ஒப்படைத்துள்ளது.
பதுளை தல்தென தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த, அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் வசந்த முதலிகே மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக சிறைச்சாலைகளுக்குல் சுகாதாரப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் பொதுவாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உரிமைகள் சம்பந்தமாக இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சேனாதீர குணதிலக உற்பட சிலர் கலந்துக் கொண்டனர்.