1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதற்காக சந்தர்ப்பமொன்று தருமாறு வெளியுறவுகள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதாயின், சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுகள் அமைச்சருக்கு பேராயர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி, விசாரணைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நம்பிக்கை தரும் வகையிலும் நடத்தப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையை ஏற்படுத்துவதாயின் உயிர்த்த ஞாயிறு சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணையத்தின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டள்ளவற்றை செயற்படுத்த வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் வெளியுறவு அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி