யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற இளம் ஊடகவியலாளர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் கடைசி ஆசையாக தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கி இருந்தமையானது அவரது சிறந்த சமூக சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்ட அஞ்சலி அறிக்கையில்,
26 வயதேயான இளம் ஊடகவியலாளர் ஞா.பிரகாஷவர்கள் கொவிட் தொற்றினால் திடீர் மரணமடைந்தார் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றுள்ளோம்.
அவர் சிறந்த ஓர் ஊடகவியலாளராக மட்டுமன்றி அவரது கடைசி ஆசையாக தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கி இருந்தமையானது அவரது சிறந்த சமூக சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்ததுடன், பல சமூக போராட்டங்களிலும் தனது உடல்நிலை இயலாத நிலையிலும் நேரடியாகப்பங்கு பற்றியும் இருந்தார் என்பதையும் இவ்வேளையில் ஞாபகப்படுத்திப்பார்க்கின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.