கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு, சுமார் 4000 உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான இடவசதியுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மையவாடிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மையவாடிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. மையவாடியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்பப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் ஜனாஸாக்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிழக்கு மாகாண இராணுவ தளபதி உட்பட கொவிட் செயலணி அதிகாரிகள் இம்மையவாடியை பார்வையிடவுள்ளனர்.
ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட்19 மையவாடியின் நிலப்பரப்பு ஜனாஸாக்களினால் பூரணமாகியுள்ள நிலையில் கிண்ணியா வட்டமடு கிராம மையவாடியை துரிதமாக ஏற்பாடு செய்யும்படி கொவிட் செயலணி வேண்டிக் கொண்டதற்கிணங்க அதன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.