கந்தளாய் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு அருகில் நடைபாதை அமைக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த எதிர்ப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக நீர்ப்பாசன ஆணையாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அலைதாங்கிக்கு அருகில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நடைபாதை செயற்றிட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணங்கினால் மாத்திரம், குறித்த வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என
நீர்ப்பாசன ஆணையாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன தெரிவித்தார்.
பராக்கிரம சமுத்திரத்தின் அலைதாங்கிக்கு அருகில் நடைபாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட கற்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.