அவசரகாலச் சட்டம் ஒன்று நாட்டில் எந்த தேவையும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இப்போது அவசரகால சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்றது.
ஆனால் இந்த முடிவு அரசாங்கத்தை அதள பாதாளத்திற்குள் கொண்டு செல்லும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 30 ஆண்டுகளாக இந்த அவசர காலச் சட்டம் தமிழ் மக்களை வேட்டையாடியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.