ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார்.
மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.