அரசாங்கம் பயணிக்கும் பாதையை தற்போதேனும் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் மனித உரிமை பேரவை கூட்டம் இலங்கைக்குப் பாதகமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.