பொலன்நறுவையில் அமைந்துள்ள புராதன லங்காதிலக்க புத்தர் சிலை அமைந்துள்ள இடம் இடி விழுந்து சேதமடைந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குறித்த தொல்லியல் இடம் அமைந்துள்ள லங்காதிலக்க கட்டடத்தின் மீது இடி தாக்கியுள்ளது.
இடி தாக்குதலில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதை காணமுடிந்துள்ளதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் சுவர்கள் வெடித்து இருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.