லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் நுழைந்து சண்டித்தனமாக நடந்துக் கொண்டமை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசரான குசலா சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து தூக்குமரத்தைக் காட்டுவதற்காக சிலரை அழைத்துச் சென்றமை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் தடுப்புக் காவல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்தமை சம்பந்தமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த மீது குற்றஞ்சாட்டப்பட்டது.