கெரவலபிட்டிய. யுதகனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
இலங்கையின் மின் உற்பத்தி ஏகபோகம் இன்னொரு நாட்டுக்கு செல்லக் கூடிய நிலைய இருப்பதால், அத்தகைய தீர்மானத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கை உயர்த்தத் தயாரில்லையென அவர் கூறியுள்ளார்.
என்றாலும், இந்த ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்க நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் செயற்படத் தொடங்கியுள்ளது.