வடக்கு வங்காள விரிகுடாவில் வட அகலாங்கு 18.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.4E இற்கும் இடையில் ஒரு தாழமுக்கம் மையம் கொண்டுள்ளது.
இத் தொகுதியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 16.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85.0E – 95.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.