1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ள நிலையில் அதில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. கடந்த நாட்களில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு கூட்டமைப்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் என்பன பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

ஏற்கனவே உள்வீட்டு விவகாரம் பூதாகரமாக இருந்த நிலையிலேயே மேற்படி பிரச்சினையும் பாரிய மோதலை ஏற்படுத்தியிருந்தது.

இதன் பின்னணியிலேதான் இன்று விசேட சந்திப்பிற்கு சம்பந்தன் தலைமையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. எனினும் இச்சந்திப்பிற்கு சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி