இன்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.ஒருபுறம் தமது பிள்ளைகளுடன் சில பெற்றோர் இந்நாளை கொண்டாடும் நிலையில், மறுபுறம் தமது பிள்ளைகளை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இத்தகையோருக்கு, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிறந்த எடுத்துக்காட்டு!
காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளை, தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் இன்றைய தினம் (01) யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினரும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.