"பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தை ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் தடுத்து வைத்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கூறினார்.
லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில்,
எம்பி ரிஷாத் தங்கியிருக்கும் அறை மாலை 5 மணிக்கு மூடப்படும். அவர் போத்தலில் சிறுநீர் கழிக்கிறார். இஸ்லாத்தின் படி ஒருவர் இரவில் இரண்டு முறை பிரார்த்தனை செய்கிறார். அதற்கு தண்ணீர் தேவை. இது நியாயமற்றது. ஆளுங்கட்சி எம்.பி.யும் இருக்கிறார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு கிடைக்கிறது.வழக்குகள் அரசியல் ரீதியாக தாக்கல் செய்யப்படும்போது இதுதான் நடக்கும். காவல்துறையினர் அரசின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுகின்றனர்.
"ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ரிஷாத்தின் மைத்துனருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பல வாரங்கள் சிறையில் இருந்தார். மருத்துவ அறிக்கை வந்தபோது, அந்த பெண் கன்னியாக இருந்தார்." அந்த சம்பவம் ஒரு அரசியல் சதி. எம்பி ரிஷாத்துக்கு எதிராக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினரின் சலுகைகளை மீறும் இந்த தடுப்புக்காவலை நான் கண்டிக்கிறேன்.