தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இலங்கைப் பாடலான மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் நாட்டின் நாடாளுமனற்றத்தில் ஒலிக்க செய்த நிகழ்வு நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த பாடல் பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாளின் பண்டார தான் ஒலிக்கச் செய்தார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது,
இந்த பாடலின் உரிமையாளர் மூலம் கிடைக்கப்பெறும் புலமைச்சொத்து சட்டம் குறித்து சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மேலும் இதனால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சனைகளுக்கான முன்னேற்பாடு நிலை குறித்த யோசனையும் சபையில் அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் பாடல் ஒன்று உலக புகழ் பெற்றிருப்பதோடு தற்போது அந்த பாடல் நாடாளுமன்ற சபைக்குள் ஒலிக்கச்செய்த சம்பவம் இதுவே முதல்முறையென தெரிவிக்கப்பட்டுள்ளது.