பதவிக்கு வந்து இரண்டு வருடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், சர்வதேசத்தின் பிடியிலிருந்தும் எமது நல்லாட்சி அரசாங்கம் மீட்டெடுத்த நிலையில் அதனை இரு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாசமாகி சதானையை படைத்துள்ளார் என சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு இருளை நோக்கிக் செல்கிறதே தவிர வெளிச்சத்தை நோக்கிக் கொண்டும் செல்லும் அடையாள்த்தைக் காண முடியவில்லை என சஜித் தெரிவித்தார். இதேவேளை சௌபாக்கியத்துக்குப் பதிலாக அரசு அசௌபாக்கியத்தை மாத்திரமே நாட்டுக்கு மீதம் வைத்துள்ளது.
ஒரு புறம் வேலையில்லாமல் இளைஞர், யுவதிகள் கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் உழவர்கள் என்ன செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் பாரதூரமான பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளளனர். இதனை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என கூறியுள்ளார்.