வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன்தியாகராஜா தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து அவர் தனது நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜீவன்தியாகராஜா தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து , தற்போது அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.