இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன (Manoj Mukund Naravana), ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில், இன்று காலை 11.05 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அத்துடன் இந்திய இராணுவ தளபதியுடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய இராணுவ தளபதி குழுவை வரவேற்க, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏராளமானோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.
மேலும் இந்த விஜயத்தின் போது இந்திய இராணுவ தளபதி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.