கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையால் எவ்வித குற்றச்சாட்டுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
60 நாட்களுக்கும் மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலாவின் பெயர், கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் பதியப்பட்டிராத போதிலும் அவருக்கு பிணை வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை தடுப்புக் காவல் சிறையில் இதை மறைத்து, சிகிச்சையளிப்பதையும் தாமதப்படுத்தியுள்ளனர். நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சட்டத்தரணிகள் கடுமையாக முயற்சி செய்துள்ளனர்.
தற்போது வைரஸ் நோயால் துன்புறும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவில்லையென செய்திகள் கூறுகின்றன.