கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரைக் கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
அளவீட்டுப் பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்குக் காலை சென்றுள்ளனர். இந்த நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.