1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தல் காலம் நெருங்கும்போதே ராஜபக்ஷ ஆட்சி முன்னெடுத்த இனவாதத்தையும், அச்சத்தையும் தூண்டும் செய்திகள் மீண்டும் திட்டமிட்டு தயாரிக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

தற்போது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் வெடி மருந்துகள், கைக்குண்டுகள் சம்பந்தமான செய்திகளை நிர்மாணித்து ‘தேசிய பாதுகாப்பு” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாக அணுமானிக்கப்படுகிறது.

அரச மற்றும் தேசியவாத பரப்புரைகள் வாயிலாக அரசாங்கத்திற்கு சார்ப்பான கொள்கையை முன்னெடுக்கும் ஊடகங்கள் இவ்வாறான செய்திகளுக்கு கடந்த காலம் பூராவும் முக்கிய இடம் கொடுத்திருந்தன.

விசேடமாக யுத்தகாலத்திற்கு பின்னர் மறைந்திருந்த வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், எல்.டீ.டீ.ஈ சீருடைகள், குண்டுகள் ஆகியன சம்பந்தமான செய்திகள் எதிர்காலத்தில் ஊடகங்களில் வெளிவரக் கூடும்.

இப்படியாக இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கிடையே சந்தேகத்தையும் பகைமையையும் வளர்த்து இனவாத வாக்குகளை சேகரிப்பதே ஆளும் கட்சியின் நோக்கமாக உள்ளது. மக்கள் எதிர்க்கொள்ளும் பொருளாதார மற்றும் வேறு பிரச்சினைகளுககு; பொறுப்புக் கூற வேண்டிய ஆட்சியாளர்களுக்கு, அவற்றை மறந்து வழமையான பயங்கரவாத அச்சமூட்டலின் மூலம் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தகைய செய்திகளை சாதாரண செய்திகள் தொட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக ஊடகங்க்ள் வெளியிடடு வருகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி