1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாளை தேர்தல் நடந்தால், தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி எடுக்காத முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ளார்.

தோல்வி நிச்சயம் என்கிறார் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ.

பதுளை மாவட்டத்தில் நெற்செய்கை விவசாயிகளுக்கு முதல் சேதன உரத்தை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்ற போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

"தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி எடுக்காத முடிவுகளை கோத்தபாய ராஜபக்ச எடுத்தார். இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றால், நாளை ஒரு தேர்தல் நடந்தால், நாம் தோற்போம் ஆனால் இந்த நாட்டில் மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் பரவாயில்லை, தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச இந்த முடிவை எடுக்கவில்லை என ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதயத்திற்கு இசைவாகச் செய்தால் எத்தனை அவமானங்கள் வந்தாலும் எங்களது பயணம் தொடரும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“அது ஒன்றும் இல்லை. ஆனால் சரியான இதய சுத்தியுடன் சரியானதைச் செய்தால், எத்தனை அவமானங்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும், எங்கள் பயணம் தொடரும் என்று நான் சொல்கிறேன். இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகளில் விளைச்சல் குறைந்தால் நஷ்டஈடு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“அது ஒன்றும் இல்லை. எனது யோசனை என்னவென்றால், திரவ உரங்கள் தொழில்நுட்பத்துடன் செல்கிறது. ஆனால் உற்பத்தித்திறனில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், இதை எப்படி சமாளிப்பது என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஏதேனும் ஒரு பயிர்ச்செய்கையில் விளைச்சல் குறைந்தால், அந்த பயிர்ச்செய்கைக்கும் அரசு என்ற வகையில் இழப்பீடு கொடுக்கம் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. விளைச்சல் குறைந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான இழப்பீட்டை விவசாயிகள் காப்பீட்டு திணைக்களம் வழங்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அரசாங்கமாக நாங்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க மாட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு செயல்படுகிறோம் ... "

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி