அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் உட்பட சிலர் கூறியுள்ள சில விடயங்களுக்கு எதிராக அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே நேற்று (25) குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
2019ல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் மற்றும் வேறு சிலர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.