சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
‘whatsapp’ சமூக இணையத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றின் மூலம் இந்த ராஜினாமா தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, அவர்களை முன்னிலைப்படுத்தி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால், நிபுணர்களினதோ, அல்லது விடயம் சம்பந்தப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்களினதோ ஆலோசனைகளின் மீது செயற்படாமையால் பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால், மக்கள் இக்கட்டான நிiiலைக்கு தள்ளப்பட்டு தெருவில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதனால் நிபுணர்கள் தமது பொறுப்புகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.