அரசாங்கம் சேதனப் பசளை கோரியது சம்பந்தமான பிரச்சினையினால் சீனத் தூதுவராலயம் மக்கள் வங்கியை ‘கறுப்புப் பட்டியலில்” சேர்த்துள்ளமை தொடர்பில் தனக்குத் தெரியானெ நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நிதி அமைச்சரின் கீழுள்ள இந்நாட்டின் பிரதான அரச வங்கிகளில் ஒன்றை ‘கறுப்புப் பட்டியலில் சேர்க்க சீனா நடவடிக்கை எடுத்ததன் பின்னர், கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெறச்சென்ற நிதியமைச்சரிடம் ஊடகவியலாளரொருவர் இது குறித்து வினவியபோது, தனக்கு இது குறித்து எதுவம் தெரியாதென சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.