நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு சுதந்திர சதுக்க மாவத்தையில் உள்ள '80 எனும் தனியார் கிளப் 480 மில்லியன் ரூபா பொதுமக்கள் பணத்தில் புனரமைக்கப்பட்டு அதே நிறுவனத்திற்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சரண மாவத்தையிலுள்ள 'ஓட்டஸ் கிளப்' மற்றும் '80 கிளப்' நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என முன்னதாக அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அண்மித்துள்ள கவர்ச்சிகரமான '80 கிளப்' வீடுகளை ஜனாதிபதி புனரமைக்கவுள்ளதாக சில சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நாட்டின் உயரடுக்கினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிளப், உறுப்பினர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கு முந்தைய நேர்காணலில், விண்ணப்பதாரரின் சமூக நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கிளப் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க நிறுவனங்களில் பதவிகளை வகிக்கும் மொட்டு கட்சியின் பல முக்கியஸ்தர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் (யுடிஏ) உறுப்பினர் கோரி, விண்ணப்பித்திருந்த போதும் இப்போது தங்களுக்கும் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.
'80 கிளப்'புக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள நிலம் அமைச்சகத்திற்கு சொந்தமானது மற்றும் '80 கிளப்' , பழங்கால மதிப்புமிக்க அற்புதமான இல்லத்தில் நிறுவப்பட்டது, அதன் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் குழுவால் நடத்தப்படுகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த கவர்ச்சிகரமான இடம் புனரமைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இது இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவின் திட்டமா என வினவிய போது, இராஜாங்க அமைச்சருக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.