ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமான போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராவும் பாடசாலைகளின் முன்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைகளின் நுழைவாயிலுக்கு முன்பாக பதாகைகளை காட்சிப்படுத்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியை நாசமாக்காமல் ‘ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண், கல்விக்கு 6 வீதம் ஒதுக்கு, பாடசாலை பராமரிப்பிற்கு பெற்றோர்களிடம் பணம் அறவிடாதீர், இலவச கல்வி உரிமையை பாதுகாப்பீர், எமது பிள்ளைகளின் தரமான கல்விக்கு ஆசிரியர்களை கௌரவப்படுத்து” போன்ற கோசங்களைக் கொண்ட பதாகைகளை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர்.