‘ஒரே நாடு, ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி யை ரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கட்டுள்ளவரின் கடந்தகால நடவடிக்கைகளை அவதானிக்காமையால் காயங்களை அவமதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளத்தின் தலைவர் ஜே.வின்சன்ட எஸ் பர்னாந்து, பதுளை பேராயர் மற்றும் செயலாளர் ஜே.டீ.அன்டனி ஜயகொடி பேராயர் பதவி உதவியாளரான பேராயரின் ஒப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.