மோசமான காலை நிலை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களின் 78 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (09) நடைபெற்ற ஊடச சந்திப்பின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க கூறுகிறார்.
நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மின்னல் தாக்கியதால் 2 பேர் இறந்துள்ளதாகவும், மண்சரிவு மற்றும் சுவர் இடிந்து வீழ்ந்தமையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். பதுளை, மாத்தளை, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் நடந்துள்ளன.