ஐக்கிய மக்கள் சக்தியினால் (எஸ்.ஜே.பி) நாளையதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்கள் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கான பொலிஸார் நீதிமன்றங்களை நாடியிருந்தனர்.
பொலிஸாரின் இந்த தடையுத்தரவு கோரிக்கையை மாளிகாகந்த மற்றும் கங்கொடவில ஆகிய நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.