ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் இன்று சுழல ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பைத்தியமாகி வருகிறது என்று சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஒருவன் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், கடவுளிடமிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் யாரும் தப்ப முடியாது என்கிறார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடத் தயாராகிய போது, அதனை எதிர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிரதேச சபையொன்றை ஆட்சி செய்த அனுபவம் இல்லாத காரணத்தினால் ஒரு நாட்டை ஆள முடியாது என கோட்டாபய ராஜபக்ச பற்றி அப்போது மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
இராணுவத்தின் ஒரு பகுதியை மாத்திரமே கட்டுப்படுத்தும் திறன் கோத்தபாய ராஜபக்சவுக்கு இருப்பதாகவும், அமெரிக்காவில் கணினி இயக்குபவராக மாத்திரமே செயற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.