நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதி முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாருஸ்லாமில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.