நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் எதிர்வரும் மார்ச் மாதமாகும் போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் அரசுக்கு ஒருபோதும் சர்வதேசத்தினால் நிதி கிடைப்பதில்லை என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,