1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொலிஸ் காவலில் இருந்த லுனுவிலகே லசந்த என்றழைக்கப்படும் டிங்கர் லசந்த இன்று காலை களுத்துறையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் சன்சைன் சுத்தா என்பவரின் கொலையில் பிரதான சந்தேக நபர் என பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டை கண்டுபிடிக்கச் சென்ற வேளையில் அங்கிருந்த கைத்துப்பாக்கியால் பொலிஸாரை சுட முயன்றபோது பொலிஸார் திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறைப் பிரதேச குற்றவியல் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இந்த சம்பவத்தின் போது காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி