களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணமைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.