ஜப்பான், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில் ஜப்பான் - ஹோன்சு பகுதியில் இன்று மாலை 6:10 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.