கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே இன்று (7) காலை காலமானார்.
இறக்கும் போது 83 வயதான அவரும் அவரது மனைவியும் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாட்டின் சிரேஸ்ட அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா கொல்லுரே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.